இலங்கை

போலி முடி சாயத்தை விநியோகித்த வர்த்தகருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலா 10 கிராம் போலி முடி சாயத்தை பொதியிட்டு சேமித்து விநியோகித்ததற்காக வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று (03) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விற்பனைக்காக அந்த பொருளை சேமித்து வைத்த புறக்கோட்டையில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த போலி முடி சாயத்தை விற்பனைக்காக சேமித்து வைத்த வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவரும், அவற்றை விநியோகித்த கொழும்பு 14 பகுதியை சேர்ந்தவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம், நான்கு குற்றச்சாட்டுகளுக்கு தலா ரூ. 7,500 அபராதம் விதித்தது.

அத்துடன் குறித்த பொருட்களை விற்பனைக்காக விநியோகித்த கொழும்பு 14 இல் வசிக்கும் நபருக்கு அபராதத்துடன் 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், அந்த தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது.

விற்பனைக்காக தொடர்புடைய பொருட்களை சேமித்து வைத்த கொழும்பு 12 இல் அமைந்துள்ள குறித்த நிறுவனமும், குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் நீதிமன்றம் 7,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்த முடி சாயத்தின் வர்த்தக நாமத்திற்கு சட்டப்பூர்வ உரிமைகளைக் கொண்ட நிறுவனம் அதன் தயாரிப்புகளை 21 கிராம் பொதிகளில் சந்தைக்கு விநியோகிக்கிறது.

எனவே, போலி உற்பத்தியாளர் 10 கிராம் பொதிகளை உண்மையான உற்பத்தியாளரின் தகவலுடன் போட்டிக்கு எதிரான மற்றும் தவறாக வழிநடத்தும் வகையில் சந்தைக்கு வெளியிட்டிருந்தால், அவற்றை சந்தையிலிருந்து அகற்றுமாறு வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் இதுபோன்ற போலி பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற போலி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

வீடொன்றின் மீது விழுந்த பாரிய மரம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக…