இலங்கை

தேசிய பொசன் நிகழ்வால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகின்றது.

பொசன் வாரத்துடனான நிகழ்வுகளை முன்னிட்டு இன்று (07) முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரம் நகரை அண்மித்த 12 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொசன் வாரமானது இன்று (07) முதல் 13 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேசிய பொசன் நிகழ்வை முழுமையான அரச அனுசரணையுடன் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

What's your reaction?

Related Posts

வீடொன்றின் மீது விழுந்த பாரிய மரம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக…