இலங்கை

4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட கருணா தனக்கு பயமில்லை என்று பகிரங்க அறிவிப்பு!

மதுபானம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியவாதிகளாம். நாங்கள் எல்லாம் துரோகிகளாம். பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சமூகம் தான் இன்று எம்மை துரோகிகளாக அடையாளப்படுத்துகிறது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

என்னை பலமுறை சிஐடியில் விசாரணைக்கு அழைத்திருக்கின்றார்கள். நான்காம் மாடி வரை சென்று வந்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு தடவைக் கூட பயந்ததில்லை. பயமுமில்லை. ஏனென்றால் நான் எந்த தவறும் இழைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலாக இருந்தாலும் சரி எந்த தாக்குதலாக இருந்தாலும் சரி நேர்மையான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் எனவும் கருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…