இலங்கை

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்பை பிரதான அமைப்புடன் இணைத்தல் மற்றும் மேம்படுத்தல் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…