இலங்கை

இருவரின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்

இருவரின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்
உஸ்ஸன்கொட கடற்கரையில் நீராட சென்ற இருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (28) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருவரையும் மீட்டு, அவர்களுக்கு அடிப்படை முதலுதவி அளித்த பின்னர், அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கிய இருவரும் ஹூங்கம பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 34 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இருவரையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் 55986 அநுர, பொலிஸ் கான்ஸ்டபிள் 99168 துலாஜ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 104435 சரத்சந்திர ஆகியோர் மீட்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…