இந்தியா

இன்று காலை தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து

இன்று காலை தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே இன்று காலை (8) ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணசாமி வித்யாநிகேதன் மூத்த மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன், ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.

ரயில் மோதியதில் 50 மீற்றர் இழுத்து செல்லப்பட்டதில் பள்ளி வேன் சுக்குநூறாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

What's your reaction?

Related Posts

தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம் – மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை

வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.…