இந்தியா

இன்று காலை தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து

இன்று காலை தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே இன்று காலை (8) ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணசாமி வித்யாநிகேதன் மூத்த மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன், ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.

ரயில் மோதியதில் 50 மீற்றர் இழுத்து செல்லப்பட்டதில் பள்ளி வேன் சுக்குநூறாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…