இலங்கை

பிரதமர் ஹரிணி மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையிலான சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

வீடொன்றின் மீது விழுந்த பாரிய மரம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதோடு, வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக…