இலங்கை

பிரதமர் ஹரிணி மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையிலான சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…