No products in the cart.
பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றுடன் கூடிய நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.