இந்தியா

இந்திய குடியுரிமையை துறப்போரின் தொகை அதிகரிப்பு

இந்திய குடியுரிமையை கைவிட்டு, வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துள்ளது. 

கடந்த ஆண்டும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டு வௌிநாடுகளில் குடியேறியுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளது 

நேற்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் வினவிய கேள்விக்கு, பதிலளிக்கும் போதே மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2024 ஆம் ஆண்டில் 2,06,378 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர். 

2020 ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேரும், 2022 ஆம் ஆண்டில் 2,25,620 பேரும், 2023 ஆம் ஆண்டில் 2,16,219 பேரும் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

2011 மற்றும் 2014 க்கு இடையில், சுமார் 1.2 இலட்சம் பேர் மட்டுமே தங்கள் குடியுரிமையை துறந்தனர். 

தற்போது, உலகளவில் 1.71 கோடி பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருப்பதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…