இலங்கை

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க புதிய ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வார இறுதி நாட்களில் இந்தப் புதிய ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, Ella Weekend Express என்ற இந்த புதிய ரயில் சேவையானது எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், 17 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…