இந்தியா

ராஜஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் மீது மோதி விபத்துக்குள்ளாகின. 

இந்த விபத்தில் வேனில் பயணித்த 7 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அடைந்தனர். 

அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

கதுஷ்யாம்ஜி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேன், வீடு திரும்பி கொண்டிருந்த போது லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வௌியிடப்படவில்லை

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…