விளையாட்டு

தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடைத்த பரிசு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. 

இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரையும் A பிரிவில் இணைக்காது இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் A பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 

ஆனால் இந்த ஆண்டு, குறித்த இருவரும் B பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு B பிரிவு ஒப்பந்தத்தில் இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் தலைவர் ஷான் மசூத், D பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், சட்டப் பிரச்சினை காரணமாக சுமார் 8 ஆண்டுகள் தனது மத்திய ஒப்பந்தத்தை இழந்த ஃபகர் ஷமானுக்கு இந்த ஆண்டு B பிரிவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி…