விளையாட்டு

ஓய்வை அறிவித்த சேதேஷ்வர் புஜாரா!

இந்திய அணியின் பிரபல வீரர் சேதேஷ்வர் புஜாரா இன்று (24) அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.

அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில் அவர் தெரிவிக்கையில்,

இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, தேசிய கீதம் பாட, ஒவ்வொரு முறையும் நான் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும் போது அணிக்கு என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன், அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…