விளையாட்டு

ஓய்வை அறிவித்த சேதேஷ்வர் புஜாரா!

இந்திய அணியின் பிரபல வீரர் சேதேஷ்வர் புஜாரா இன்று (24) அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.

அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில் அவர் தெரிவிக்கையில்,

இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, தேசிய கீதம் பாட, ஒவ்வொரு முறையும் நான் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும் போது அணிக்கு என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன், அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…