இலங்கை

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று 30)டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பான் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர்  யோஹெய் சசகாவாவை சந்தித்துள்ளார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன்போது, இலங்கையில் உள்ள ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதாக தனது உறுதி மொழியை சகாவா வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளை புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் இதன் போது அவர் வெளியிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…