இலங்கை

சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்தவர் கைது

குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர் பெப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

விசாரணையில், குறித்த நபர் தனது சகோதரரின் வீட்டில் வேறொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, சகோதரருடன் ஏற்பட்ட முறுகல் நிலைய தீவிரமடைந்ததில் சகோதரர் அவரை வாளால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…