இலங்கை

கல்கிஸ்ஸை சம்பவத்தின் பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

இன்று (13) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் குறித்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், கல்கிஸ்ஸை நீதவான் பசன் அமரசேன, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளை தலா 100,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார். 

சம்பவம் நடந்த நேரத்தில் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, பொலிஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மற்றொரு பி அறிக்கை மூலம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

நீதிமன்றில் மேலும் சமர்ப்பணங்களை முன்வைத்த பொலிஸார், சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகவோ அல்லது பொலிஸாருக்கு வாக்குமூலம் அளிக்கவோ இல்லை என்றும் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…