இலங்கை

கொழும்பில் குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 27 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…