இலங்கை

மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில், தனமல்வில பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட கித்துல்கோட்டை பிரதேசத்தில் இன்று (17) முற்பகல் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் பேருந்து, வேன் மற்றும் கார் ஆகியவை மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் யாருக்கும் பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும், வாகனங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்து தொடர்பில் தனமல்வில பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…