இலங்கை

மனைவியைக் கொன்று கணவன் தற்கொலைக்கு முயற்சி

வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

நேற்று (17) மாலை மனைவி மற்றும் கணவனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கணவன் மின்விசிறி வயரினால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 

அதன் பின்னர் கணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில், அவர் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

25 வயதுடைய சந்தேகநபர் வைத்தியசாலையில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…