இலங்கை

அதிகரித்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 11 ஆம் திகதி 3200 அமெரிக்க ​டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தது இதுவே முதல் முறை என்று குறிப்பிடப்படுகின்றது. 

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

முதலீட்டாளர்கள் தங்க இருப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறுவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு தங்கச் சந்தை இன்று 11ஆம் திகதி அறிவித்த தங்க விலை விபரங்களின்படி, 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 235,500 ரூபாயாகும். 

மேலும், 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 256,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…