No products in the cart.
யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (14) மதியம் யாழ்ப்பாணம் சுப்பர்மடம் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 28 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்கள் என 23 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.














