இலங்கை

ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு – 30 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் வரலாறு காணாத கடுமையான பனிப்பொழிவு காரணமாககடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை துருப்புக்களை அனுப்ப பிரதமர் சிகேரு இஷிபாவின் அரசாங்கம் உத்தரவிட்டதாக ஜப்பானிய தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பனிச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கூரைகளில் இருந்து பனி விழுதல் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுதல் போன்ற உயிருக்கு ஆபத்தான சம்பவங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…