இலங்கை

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ஊழியர் ஒருவர் படுகாயம்!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) நண்பகல் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.

பின்னர் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…