இலங்கை

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டமொன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்தன.

இந்நிலையில் இன்று மாலை கூடிய லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…