இலங்கை

‘AI Impact’ மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தியா பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு  தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (17) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய, ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைக் குழுவினர் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…