இலங்கை

மருதானையில் போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞன்

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை, கோவில்வத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது  மருதானை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது, சந்தேநபரிடமிருந்து 750 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 150 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.   

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…