No products in the cart.
கொழும்பில் குழப்பம்: வெளிநாட்டு பெண் கைது, இலங்கை பெண் சம்பந்தம் – பொலிஸார் மீது தாக்குதல்
பிரதேசத்தில் பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோதலை கட்டுப்படுத்த சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரையும் அந்தப் பெண் தாக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 37 வயதுடைய உக்ரைன் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 18 வருடங்களாக குறித்த பெண் திருமண விசா அடிப்படையில் இரத்மலானை பிரதேசத்தில் வசித்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இதன்போது அந்த வெளிநாட்டுப் பெண், கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.














