இலங்கை

ட்ரம்ப் குறித்த நேரம் ஆரம்பம் ; ஈரானை நெருங்கும் பெரும் ஆபத்து ; சிக்கலில் உலகம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழித் தடை ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கவும், அவர்கள் ஹோர்முஸ் நீரிணையில் வசூலிக்கும் கட்டணங்களைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கையை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தத் தடையை மீறும் அல்லது அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் கடுமையாகத் தாக்கப்படுவார்கள் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 இது சர்வதேச எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கடற்கொள்ளைக்கு ஒப்பானது என்று ஈரானின் புரட்சிக்கர காவல்படை விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி வழங்கப்படும் என்றும் ஈரானிய புரட்சிக்கர காவல்படை எச்சரித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…