இலங்கை

காதலன் கொடூரம்: இளம் பெண் படுகொலை


மொனராகலை, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு வெல்லவாய மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவராகும். அவருக்கும் அவரது சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதால், அவரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…