இலங்கை

போதைப்பொருள் பொதிகளுடன் சிக்கிய படகு – கரையில் பெரும் அதிர்ச்சி!

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

நேற்று (16) குறித்த நெடுநாள் மீன்பிடி படகு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது. 

அதனுடன் படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் படகும் மீனவர்களும் பொறுப்பேற்கப்பட்டனர். 

குறித்த மீன்பிடி படகில் உள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் அடங்கியதாகச் சந்தேகிக்கப்படும் பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…