இலங்கை

பொடி பெட்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – விசாரணை தீவிரம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘லொகு பெட்டி’யின் சகோதரரான ‘பொடி பெட்டி’ என்பவரை இலக்கு வைத்து அஹுங்கல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

நேற்று (16) இரவு 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

‘பொடி பெட்டி’ என்பவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பி கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…