இலங்கை

சீனி வரி மோசடி வழக்கின் விசாரணைக்கு திகதி நிர்ணயம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி குறைக்கப்பட்ட போது, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட 1,590 கோடி ரூபாய் நஷ்டத்தை வசூலிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஜூன் மாதம் 27ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு இன்று (18) ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதியரசர்கள் ஆயம், இந்த மனுவை பரிசீலனைக்காக ஜூன் மாதம் 27ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…