இலங்கை

மட்டக்களப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (7) முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே, இந்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். 

திக்கோடை சுவரணையடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

கைதானவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…