கனடா

கப்பம் கோரல் விசாரணையில் மூவர் கைது

கனடாவின் பிராம்டனில் கப்பம் கோரல் குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 30ஆம் திகதி, பிராம்ப்டனில் குயின் வீதி மற்றும் கெனடீ சாலை தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

சம்பவத்தின் போது அந்த வளாகத்தில் யாரும் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, உரிய நபர் ஒருவருக்கு தெரியாத நபரிடமிருந்து பணம் கோரிய மிரட்டல் செய்திகளும் கிடைக்கத் தொடங்கின.

மே 1ஆம் திகதி, பல்வேறு விசாரணை அணிகள், கண்காணிப்பு, சமூகவியல் கையாளும் குழு மற்றும் நடவடிக்கைக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் பின்னர், பிராம்ப்டனைச் சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்பால் சிங், ரஜ்னூர் சிங் மற்றும் எக்னூர் சிங் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் தற்போது காவலில் வைத்து, பிணை விசாரணைக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளனர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…