இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மலேசிய கப்பல்!

ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பல் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குறித்த கப்பலில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளனர்

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…