இலங்கை

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – எழுவர் படுகாயம்!

கொழும்பு பிரதான வீதியில் உள்ள இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இன்று (21) காலை ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிகொடவெல ரயில் கடவை மூடப்பட்டிருந்த வேளையில்இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன,அந்நேரத்தில், ஒரு கொள்கலன் லொறி வந்து நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது, பின்னர் வேன் கடந்து சென்று ஒரு பவுசர் மீது மோதியதால் வேன் பலத்த சேதமடைந்துள்ளது,இவ்விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…