இலங்கை

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – எழுவர் படுகாயம்!

கொழும்பு பிரதான வீதியில் உள்ள இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இன்று (21) காலை ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிகொடவெல ரயில் கடவை மூடப்பட்டிருந்த வேளையில்இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன,அந்நேரத்தில், ஒரு கொள்கலன் லொறி வந்து நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது, பின்னர் வேன் கடந்து சென்று ஒரு பவுசர் மீது மோதியதால் வேன் பலத்த சேதமடைந்துள்ளது,இவ்விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…