இலங்கை

போதைப்பொருட்களுடன் 344 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 109 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 117 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 116 பேரும், மாவா போதைப்பொருளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 157  கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 199 கிராம் 338 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 03 கிலோ 912 கிராம் 540 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 25 கிராம் 70 மில்லிகிராம் மாவா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…