இலங்கை

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

கந்தர பொலிஸ் பிரிவில் உள்ள தெவிநுவர உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெரவின் காவடி பெரஹெர நிகழ்வு நாளை (7) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், இறுதி ரந்தோலி பெரஹெர நாளை மறுதினம் (8) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

பெரஹெர வீதி ஊர்வலத்தின் போது கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதி மூடப்படும் என்பதால், குறித்த காலப்பகுதியில் இந்த வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மாற்று வழிகள் 

  • மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், மெத்தவத்த தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாத்தறை யடியன வீதிக்குத் திருப்பி, கெகணதுர சந்தியிலிருந்து வெஹெல்ல வீதி வழியாக திக்வெல்ல நோக்கிச் செல்லலாம். 
     
  • தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தலல்ல தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் திரும்பி, நாவொடுன்ன வீதி வழியாக வியன்னருவ சந்திக்குச் சென்று, பின்னர் திக்வெல்ல வெஹெல்ல வீதி வழியாக கெகணதுர சந்திக்குச் சென்று கெகணதுர-மாத்தறை வீதி வழியாக மாத்தறைக்குச் செல்லலாம்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…