இலங்கை

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

கந்தர பொலிஸ் பிரிவில் உள்ள தெவிநுவர உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹெரவின் காவடி பெரஹெர நிகழ்வு நாளை (7) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், இறுதி ரந்தோலி பெரஹெர நாளை மறுதினம் (8) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

பெரஹெர வீதி ஊர்வலத்தின் போது கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதி மூடப்படும் என்பதால், குறித்த காலப்பகுதியில் இந்த வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மாற்று வழிகள் 

  • மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், மெத்தவத்த தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாத்தறை யடியன வீதிக்குத் திருப்பி, கெகணதுர சந்தியிலிருந்து வெஹெல்ல வீதி வழியாக திக்வெல்ல நோக்கிச் செல்லலாம். 
     
  • தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தலல்ல தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகில் திரும்பி, நாவொடுன்ன வீதி வழியாக வியன்னருவ சந்திக்குச் சென்று, பின்னர் திக்வெல்ல வெஹெல்ல வீதி வழியாக கெகணதுர சந்திக்குச் சென்று கெகணதுர-மாத்தறை வீதி வழியாக மாத்தறைக்குச் செல்லலாம்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…