இலங்கை

வவுனியா மாநகரசபையின் துணை முதல்வரை பதவி விலககோரி அழுத்தமா..!

வவுனியா மாநகர சபையின் துணை முதல்வரை பதவி விலக கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாநகர சபையினால் நடை பாதை வியாபாரம் முற்றிலும் தடைசெயப்பட்டு அவர்களுக்கான மாற்றிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் வவுனியா மொத்த மரக்கறி வியாபார நிலையங்களும் பொருளாதார வர்த்தக மையத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள இஸ்லாமிய சமூகம் சார்ந்தவர்களின் சிறு வியாபார நிலையங்களும் நடைபாதையில் இருப்பதால் அவற்றையும் அகற்றுவதற்கு வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையிலேயே அவரை பதவி விலக செய்யுமாறு ஒரு சில அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…