இலங்கை

கொழும்பிலுள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பு கிராண்ட்பாஸ் – மோலவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

55 முதல் 60 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…