இலங்கை

BYD வாகனம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட விடயம்

இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் வங்கி உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க இணக்கம் வௌியிடப்பட்ட BYD வாகனங்களின் இயந்திரத் திறனைத் மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த சில வாரங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சட்டமா அதிபர் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். 

தங்களால் இறக்குமதி செய்யப்பட்ட BYD வாகனங்களை இலங்கை சுங்கம் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் CG நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…