விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4
சுற்றுப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (20) இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதன்படி,எதிர்வரும் 23 ஆம் திகதி அன்று அபுதாபியில் பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 26 ஆம் திகதி அன்று துபாயில்
இந்தியாவுடனும் இலங்கை அணி மோதவுள்ளது.

சூப்பர் 4 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

What's your reaction?

Related Posts

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி…