இலங்கை

கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் விபரங்கள் வௌியானது

மெல்சிறிபுர – நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு (24) நடந்த கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவரும், ருமேனிய பிக்கு ஒருவரும் மற்றும் இந்திய பிக்கு ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நிகழ்ந்தபோது கேபிள் காரில் பயணித்த மொத்தம் 13 பிக்குகளில் இருவர் அதிலிருந்து குதித்து தப்பிய நிலையில், மேலும் நான்கு பிக்குகள் படுகாயமடைந்தனர். 

தற்போது காயமடைந்த ஆறு பிக்குகளும் குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…