இலங்கை

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பு தொடர்பில் சீனத் தூதுவர் கூறியுள்ள விடயம்

2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான நட்பு, இன்றும் “ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது” என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஸென்ஹோங் உறுதிப்படுத்தியுள்ளார். 

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட சீன விஜயம் வெற்றியளித்துள்ளது. 

எங்கள் இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியமான முடிவுகளை எட்டினர். இது எமது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு ஒரு புதிய மூலோபாய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

சவால்கள் இருந்த போதிலும், இரண்டு நாடுகளும் பொதுவான இலக்குகளுடன் பிணைக்கப்பட்ட பங்காளிகள் என வர்ணித்த தூதுவர், சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, பரஸ்பர செழிப்பு, அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்த உறுதியளித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…