இலங்கை

பாடசாலை மாணவியை பாலியல் பலகாரம் செய்து கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர்

இந்தியா துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தனியார் பாடசாலையில் படித்த பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தைகூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பள்ளியில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சேர்ந்த  33 வயதுடை கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தவரே இவ்வா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

இவர் சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் பழகியுள்ளார்.

அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தைகூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆசிரியரை பணிநீக்கம் செய்தது. இந்த நிலையில் மணிகண்டனால் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவிக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் கூறினார்.

இந்த தகவலை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, ஆசிரியர் தான் கர்ப்பத்திற்கு காரணம் எனக்கூறி கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்  மகளிர் காவல் துறை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…