விளையாட்டு

இலங்கைக்கு மேலும் இரு வெண்கலப் பதக்கங்கள்

இந்த ஆண்டு உலக பாரா தடகள செம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீப் சோமசிறி, T47 பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3.53.7 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று ஆசிய சாதனை படைத்துள்ளார். 

அத்துடன் அணித் தலைவர் நுவான் இந்திக கமகே, T44 பிரிவில் நீளம் தாண்டுதலில் 6.46 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். 

உலக பாரா தடகள செம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்றதுடன், இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 05 விளையாட்டு வீரர்கள் 09 போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…