இலங்கை

முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது.

இச்சுட்டெண் இன்று 217.65 புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து 22,633.80 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் 36.39 புள்ளிகள் அதிகரித்து 6,263.03 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேவேளை, இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 11.28 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…